Thursday, August 5, 2010

கிரந்ததை கற்க

அறிமுகம்
(நூலின் முன்னுரையிலிருந்து)

நவீன சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு கிரந்தத்திலான கையெழுத்து பிரதிகளை படிக்க வேண்டிய திறமை இன்றியமையாதது ஆகும் [...]. கிரந்த எழுத்துமுறைக்கான வழிகாட்டிகளோ அறிமுகங்களோ பல நூலகங்களில் கிடைப்பதில்லை. [...] இது கிரந்த கையெழுத்துப்பிரதிகள் மற்றும் கல்வெட்டுகளை படிக்க விரும்பும் அறிஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சி. [...]

கையெழுத்து வடிவங்கள் மிகவும் ஒருவருக்கொருவர் வேறுபடுமென்பதாலும் மேலும் அனைத்து வேறுபாடுகளையும் விளக்க இயலாது. மொழி மற்றும் நியம அச்சுக்கிரந்த அறிமுகம் உடைய ஓர் அறிஞர் எளிதாக எல்லா வேறுபாடுகளையும் கண்டு கொள்ளலாம். ஆகவே தான் தான் நான் அச்சு எழுத்துக்களை மட்டுமே விவரித்துள்ளேன் [...]

உள்ளடக்கம்
முன்னுரை
கிரந்த எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
உயிர்மெய்யெழுத்துக்கள்
கூட்டெழுத்துக்கள்
'ர'கரம்
'ய'க்ரம்
'த'கரம் மற்றும் 'ந'கரம்
'ம'கரம் மற்றும் 'அ'னுஸ்வாரம்
எளிதாக குழம்பக்கூடிய எழுத்துக்கள்
வாசிப்பு உதவி
கூட்டெழுத்துக்கள் இல்லாத சொற்கள்
கூட்டெழுத்துக்கள் கொண்ட சொற்கள்
வாசிப்பு பயிற்சிக்கான உரைப்பகுதிகள்
பகவத்கீதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை
பிரம்ம சூத்திர சங்கரபாஷ்யாரம்ப:


http://dsal.uchicago.edu/digbooks/digpager.html?BOOKID=PK419.V468_1983&object=6

Wednesday, August 4, 2010


ஜே ஜிநேந்த்ரா!
வந்தே ஜிநவரம்!! ஸ்ரீ ஜிநாய நமஹ:
பேரழகன் பாகுபலி
ஸ்ரவண பெளிகுளம் - மைசூர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. பெங்கலூரிலிருந்து 100 மைல், மைசூரிலிருந்து 60 மைல், ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து 32 மைல் தூரத்தில் உள்ளது.

சமணர்களுக்கு, போற்றத்தக்க புனித ஸ்தலம்! சமணர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கும் இணையற்ற புனித தலம் எனக் கூறினால் மிகையன்று! இங்கு செல்லும் மக்கள் - தம் இன வேறுபாட்டை மறந்து - இயற்கை கடவுளான, பகவான், "கோமதீஸ்வரரை", உள்ளன்புடன் கை கூப்பி, வணங்கத் தவறுவதே இல்லை!

மேலுன், இங்கு வருபவர்கள் - காணும் காட்சியால், வியப்பில் ஆழ்ந்தவர்களாகிச் சொற்களில், சொல்ல இயலாத நிலையில், இன்பக் கடலில், மெய்மறந்து விடுகின்றனர்.

உலக அதிசய மூர்த்தியான கோமடேஸ்வர் , வீற்றிருக்கும் மலை - "விந்தியகிரி" - "தொட்டபெட்டா" (பெரியமலை) - "இந்திரகிரி" - என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது! இம்மலை 47 அடி உயரம்; கடல் மட்டத்திலிருந்து 3347 அடி உயரம் கொண்டது. மலை ஏற சுமார் 500 படிகள் உள்ளன. மலையின் சுற்றளவு 1/4 மைல்.

பகவான் கோமடேசர் அருகாமை:-
மலை ஏறியதும், முற்றம் காணப்படுகிறது. முற்றத்தின் சுற்றுப் புறத்தில் ஜின பகவானின் சிலைகள் உள்ளன. மேலே சென்றதும், மற்றொரு மதில் சுவர் உள்ளது, அதன் நுழைவாயில் வழியாக, உள்ளே சென்றதும், மூவுலகோர் தொழும் பகவான் கோமடேசுவரரின் (பாகுபலி) ஒப்பற்ற திருமேனி, கம்பீரமாக காட்சியளிக்கிறது! 57' அடி உயர திரு உருவம், நின்ற வடிவில் மிளிர்கிறது! அமைதி நிலவும், மோகன நிலையில், தன்னுள் ஆழ்ந்த, வெண்ணிற வடிவம் உயிரோவியமாகக் கண்களைக் கவர்கிறது!

உலக அதிசயங்களில், இதற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது எனில், மிகையாகாது!

இத்தகைய புனிதத் திரு உருவின், உயர்ந்த புருவமும், படர்ந்த நெற்றியும், சுருண்ட முடியும், கருணையும், புன்முறுவல் நிறைந்த முகத்தாமரையும், நீண்ட அழகிய செவிகளும், தியான நிலையிலும் - சிறிது அலர்ந்த கண்களும், உயர்ந்தும், பரந்தும் காட்சிதரும் - மார்பகமும்; நீண்ட கொடி போன்ற இரு கைகளும்; தொழுது வணங்கும் தொண்டர்களுக்கு இன்பம் பயக்கும் திருவடிகளும், எழிழ் உருவம் கொண்ட, அங்க அவயங்கள் பொருந்திய பகவான், சிலை வடிவில் மிளிர்கிறார்! அத்தகைய தேவனின், அனைத்து அங்க அவயங்களின் அமைப்பைக் காணும்போது; சிலைக்கும் - மனித உருவிற்கும் வேற்றுமை இல்லை! உடலில் மாதவிக் கொடியும், முழங்காலுக்கருகே படமெடுத்தாடும் பாம்புள்ள, புற்றும்; அகிலனின் அஞ்சா நெஞ்சத்தப் பறை சாற்றுகின்றன. திருவடிக்கு கீழே மலர்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை - மாபெரும் தாமரை - வடிவமைக்கப் பட்டுள்ளது.

இச்சிலையின் மீது, எத்தகைய நிழலும் விழுவதில்லை!

இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அதி அற்புதச் சிலையாகும்!

இம்மாபெரும் சிலை, எவ்வித ஆதாரமுமின்றி தனித்து நிற்கின்றது!

கம்பீரமான இச்சிலையைக் காணும் ஒவொருவர் உள்ளத்திலும், தன்னடக்கத்தின் தெளிவு ஏற்படுகிறது!

இறைவனின் அழிவில்லாததும், எல்லை இல்லாததுமான, நிறை அழகில் எங்கும் - எக்காரணத்தை கொண்டும் - குறையே காண முடியாது - என்பதைக் கூறாமலிருக்க முடியாது!

இறைவனின், அங்க அவயங்களில் நிறைந்திருக்கும் அழகு - அனுபவித்து, அறியத்தக்கதே ஒழிய, கூற இயாலாதது!

பிரபு - இறைவைனை தரிசித்ததும்; ஒரு நிமிடம் கண்மூடி, சிந்திக்குங்கால், பகவான் பாகுபலியின் சிலையினருகில் இருப்பது போல் இல்லாமல் - யோகத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மையான - கோமதீஸ்வர பகவான் அருகில் அமர்ந்திருப்பதை போன்ற காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது! இதனை அனைவரும் உணர்ந்து மட்டுமே புரிந்து கொள்ள இயலும் ! எழுத்தில் சொல்ல இயலவில்லை!

இந்த ஜோதி நாயகரை, ஒரு முறை தரிசித்தால் - மனம் திருப்தி கொள்வதில்லை! ஓயாமல், பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகின்றது!

ஜிந தேவருடைய திருவடிகளில் - செல்வம், செழிப்பு, முன்னேற்றம் ஆகிய அனைத்தும், நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அவருடைய திருவடிகளை வணங்குபவர்களுக்கு - இவை யாவும், இயல்பாகவே கிடைத்து விடுகின்றன!! ஜிந பகவானுடைய திருவடிகளைத் தூய பக்தியுடன் பணியும் பக்தர்களை, வறுமை வாட்டுவதே இல்லை! அவர்களைக் கண்டு நடுங்கி ஓடி விடுகிறது!

சிலை வடக்கு நோக்கி நிற்கின்றது. பகவான் கோமடேசரின் அற்புதச் சிலை, நிறுவப்பட்டதன் காரணமாக - "பெளிகுளம்" - "போதனபுரம்" என அழைக்கப்பட்டது.

1865ல் மைசூர், தலைமை கமிஷனர் திரு.பாபு ரங்கா என்பவர், பெரிய சாரம் கட்டி, சிலையின் சரியான அளவுகளைக் கண்டு பிடித்தார்! அவர் கண்ட அளவின்படி சிலையின் உயரம் 57 அடி ஆகும்!


சிலையின் இதர அளவுகள் விபரம்:-
அடி அங்குலம்
கால் முதல் காது வரை 50 --
காதின் அடி பாகம் முதல் தலை 6 6
கால்கள் நீளம் 9 --
இடுப்பு சுற்றளவு 10 --
இடுப்பிலிருந்து காது வரை 17 --
கையிலிருந்து காதுவரை 7 --
கால்களின் முன் அகலம் 4 6
கால் விரல் 2 ---
காலின் பின்புறம் மேல் அளவு 6 4
முழங்காலின் பாதி மேல் அளவு 10 --
புட்டத்திலிருந்து காது வரை 20 6
பின்புறத்திலிருந்து காதுவரை 20 --
தொப்புள் கீழ் வயிற்றின் சுற்றளவு 13 --
மார்பின் அகலம் சுற்றளவு 6 --
கழுத்தின் கீழிருந்து காதுவரை 2 6
ஆள் காட்டி விரல் அளவு 3 6
2வது விரல் அளவு 5 3
3வது விரல் அளவு 4 7
சுண்டு விரல் அளவு 2 8
சிலையின் முழு அளவு 57 00

சிலை கி.பி. 1028ல் வடிக்கப்பட்டது! தற்போது 975 வருடங்களாகிறது! முதல் ப்ரதிஷ்டை சித்திரை மாதம் வளர்பிறை, பஞ்சமி, ஞாயிற்றுக் கிழமை, மிருகசீரிஷபம் நட்சத்திரம், கும்ப லக்னத்தில் நடைபெற்றது. 12 வருடங்களுக்கு ஒருமுறை முடி பூஜை - மகா மஸ்தகாபிஷேகம் - நடை பெற்று வருகிறது. அடுத்த முடிபூஜை, 2005ல் நடைபெற வேண்டும்!

சிலை உருவானது குறித்து, கன்னட கவி, பஞ்சபாணன் எழுதிய "புஜ பலி சரித்திரத்தில்" கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:-

"குரு ஜிநசேனர், தென் மதுரையை ஆண்ட, சாமுண்ட ராயர் தாயார், "காலல் தேவியிடம்", - "போதனபுரத்தில் பாகுபலியின் மாபெரும் சிலை உள்ளது; அதை தரிசித்தால் - நலம்" என்றார். உடனே அந்த தாய் - "கோமடேச பகவானை தரிசிக்கும் வரை, பால் அருந்துவது இல்லை", என்று 'பிரதிக்னை' (விரதம்) எடுத்தார்! இச் செய்தியை சாமுண்ட ராயரின் மனைவி, அஜிதா தேவி மூலம் அறிந்து, தாயார் மீது உள்ள பற்றின் காரணமாக, குடி, படை, ராஜ பிரதாணிகளுடன் போதனாபுரம் பயணமானார். இடையில் சிரவண பெளிகுளாவில் தங்கினார். அங்குள்ள "சந்திரகிரி" மலையில் உள்ள பகவான் பார்சுவநாதரை தரிசித்தனர்; அருகில் உள்ள சுருதகேவலி பத்ரபாகு சுவாமிகள் திருவடிகளை தரிசித்தனர். அன்று இரவு சாமுண்டராயர் கனவில், பிரம்ம தேவரும், பத்மாவதியும் தோன்றி, "தற்சமயம், நீங்கள் போதனாபுரம் செல்ல இயலாது! உங்கள் பக்தியின் பலனாய், விந்திய கிரியில் (பெரிய மலை) அப்பகவன் தரிசனம் கிடைக்கும், குளித்து தூய உடை அணிந்து; சிறிய மலையில் அமர்ந்து; பெரிய மலையை நோக்கி 'சுவர்ண பாணத்தை' விடுவாயாக - காட்சி கிடைக்கும்!" என்றனர்.

இதே கனவு சாமுண்டராயர் தாயாருக்கும் தோன்றியது. மறுநாள் காலையில், சந்திர கிரியிலிருந்து, சுவர்ண பாணம் ஏவினார்! பாணம் சென்று பெரிய மலையில் உள்ள கல்லில் பட்டதும்; கல்லை துளைத்ததும்; உடனே பகவான் தரிசனம் சிடைத்தது! தாயார் "கல்லல் தேவியின்", விருப்பம் நிறைவேறியது.

இம் மாபெரும் சிலை உள்ளவரை உலகில் ஜின தேவருடைய வீதராக (பற்றற்ற) ஆட்சியின் வெற்றிக் கொடி பட்டொளி வீசி, வானளாவப் பறந்து கொண்டிருக்கும்! எண்ணற்ற பவ்ய ஜீவன்களுக்கு, அமைதி நிலவிக் கொண்டே இருக்கும். இவ்விதமாக - "பேரழகன் ஸ்ரீ பாகுபலி" - கோமட்டேச ஸ்வாமி திவ்ய தரிசனத்தை கண்குளிரக் கண்டு - மன மகிழ்வோடும், மன அமைதியோடும், "இவ்வித பாக்கியம்", எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்ற, இதயபூர்வமான பிரார்த்தனையோடு மலையிலிருந்து இறங்கினோம்.

பகவான் பாகுபலிக்கு ஜே !

தமிழ்நாட்டில் உள்ள இந்து அதிசயங்கள்

ஆவுடையார்கோவிலில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதம் அளவிற்கு செதுக்கியுள்ளனர்.

திருச்சியில் உள்ள கல்லணையை எந்த தொழில்நுட்பத்தின்படி கட்டினார்கள் என்பது நமக்கே இன்னும் தெரியவில்லை?!!!(நீங்கள் கல்லணைக்குப் போயிருக்கிறீர்களா?ஒரு கரையிலிருந்து பார்த்தால் இன்னொரு கரை மிகச்சிறியதாகத் தெரியும்.)
தண்ணீர் பஞ்சம் உள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு வெள்ளம் காவிரியில் வருகிறதே!!! சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு தண்ணீர் வந்திருக்கும்.அப்போது எப்படி இந்த அணையைக் கட்ட முடிந்தது?

போஜராஜமகாராஜா சமராங்கண சூத்திரத்தில் விமானம் கட்டும் கலையை பாடல்களாக எழுதியுள்ளார்.

மனு சாஸ்திரம் எழுதிய மனு பிறந்தது வாழ்ந்தது எல்லாமே நமது தமிழ்நாட்டில் தான்.ஜாதிகள் செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
கலியுகம் முடியும்போது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தான் கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார்।(இலங்கையில் ஒரு திருநெல்வேலி & நாகர்கோவில் உள்ளது)।ஆக, சாஸ்திரங்களை கலிகாலம் முடியும் வரை அச்சுப்பிசகாமல் பின்பற்றி வருவது தமிழ்மக்கள் மட்டுமே!!!

ஓம்- ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம்





அடிப்படைக் குரல் ஒலிகள் மண்ணிலோ ஏதாவது ஒரு திரவத்திலோ அதிர்வடையச்செய்யும்போது, அவை சில அமைப்புக்களை உண்டாக்கும்.இந்த அமைப்பு இயல் அலையியல் (Cymatics) எனப்படும்.

இதனைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியவர் சுவிஸ்நாட்டின் அறிஞர் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி(1904 முதல் 1972 வரை).ஒலியின் ஒவ்வொரு அதிர்வும் ஒரு தனித்த அமைப்புடையது.இயற்கை மூலம் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.

இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!

பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.

ஹான்ஸ்ஜென்னி ஓம்கார ஒலியை மணலில் அதிரச்செய்தார்.அவ்வாறு செய்த போது ஸ்ரீசக்கரவடிவத்தில் படல் கிடைத்தது.எனவே,ஓம் என்ற பிரணவ ஒலியின் வரிவடிவம்(ஸ்தூல வடிவம்)ஸ்ரீசக்கரம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?நமது ஆன்மீகம் எவ்வளவு அறிவியல் தன்மைகொண்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்।
நன்றி:ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்,பக்கம் १३, பிப்ரவரி 2008


ஓம் என்னும் பிரணவம்
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே.அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ''ஓ'' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ''ம்'' என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம்-ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரணவ ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ஓம். மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாவது போல் உடலும் உயிரும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்.

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

தனைச் சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச் சிவசக்தி வடிவமே, சொரூபமேவரி வடிவில் "ஓ" என பிள்ளையார் சுழியாகவும்,"உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும் சொல்கிறார்கள்.

இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,ரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு தைச் சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதைப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து :
^^^^^^^^^^^^^
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
-- என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- --என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் இதுவே "அ" உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
-என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு ஆதியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் ஆதியாகும்
அறிந்தோர்க்கு திலேதான் வெளியதாகும் "
--என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.
^^^^^^^^^^^^^^^^^^
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் இவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும்எல்லா ஒலியையும் விட மிகவும் யற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் துவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். து எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

தை விளக்கும்படி திருமூலர்,

"ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும்" என்று கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே ணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தைத் தனிமையாக ருந்து ஏகாந்த தியானம்செய்தால் தன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் ல்லாத ஒன்றாகிவிடும்.ந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். தன் மூலம் ஒளியைத் தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
You see, there is no gain without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம்.வேகமாக
சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து டப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில் குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது'ஓம்' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும்.இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன் குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும்.உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும்.குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு ஆதரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.
[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் ந்த விந்துதான் பிரணாயமத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம்.கீழ் இறங்கினால் சிற்றின்பம்.

யோகியர் நாவை மடித்து தனை உண்ணுவார். இ ந்த ஒரு சொட்டு அமுதம் சுவைதால் பசி,தாகம்,தூக்கம் ல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். தனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

தனை திருமூலர் :
"ஏற்றி றக்கி ருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை.அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை.அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற ன்பம் வ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா ருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை.தனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.

மகாபாரதமும் நிஜமே! ஆதாரங்களுடன்




ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது.கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வலைப்பூவிற்கான படங்கள் http://www.deshgujarat.com/ என்ற தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.

புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.
கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது.ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள்,ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர்கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன.கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது.மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது.

இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.த்வாரமதி,குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள்,குடியிருப்புகள்,வியாபார ஸ்தலங்கள்,அகன்ற சாலைகள்,பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு(தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.

இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
நன்றி:ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.

எனது ஆன்மீகக்கடல் வலைப்பூ வாசகர்களே !!!
ராமாயணமும் உண்மை.மகாபாரதமும் உண்மை.இருந்தும் ஏன் எய்ட்ஸைப் பரப்பும் அமெரிக்கக் கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
இந்து என்பதில் பெருமை கொள்வோம்.நமது இந்து தர்மத்தை உலகம் முழுக்கப்பரப்புவோம்.

நொடியில் தோன்றி அசுர வதம் புரிந்த நரசிம்ம அவதாரம்!

தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங் கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும்.

தான் எவராலும் வெல்லப்படாத வனாக- என்றும் மரணமற்றவனாக வாழ வேண்டுமென்று மிக சாமர்த்தியமாக வரங்களைப் பெற்றான் இரண்யன். "பூமியிலோ வானத்திலோ எனக்கு மரணம் நிகழக் கூடாது; வீட்டிற்கு உள்ளேயோ வெளியிலோ மரணம் சம்பவிக்கக் கூடாது; இரவிலோ பகலிலோ உயிர் பிரியக்கூடாது; தேவர், மனிதர், அரக்கர், மிருகம், பறவை போன்ற உயிரினங் களால் மரணம் ஏற்படக் கூடாது; எந்த வகை ஆயுதங்களாலும் என் உயிர் பறிக்கப்படக் கூடாது' போன்ற வரங்களைப் பெற்றான்.

அதனால் உண்டான மமதையில் இறை நிந்தனை செய்து, "நாராயணனே கடவுள்' என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். அந்தத் தருணத்தில்தான் தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்துகொண்டு அவதரித்தார் நரசிங்கப் பெருமாள். இரண்யன் பெற்ற வரத்திற்குப் பொருந்தாத நரசிம்ம வடிவோடு, பகலும் இரவும் அற்ற அந்தி வேளையில், உள்ளேயோ வெளியிலோ என்றில்லாமல் வாயிற்படியில், தரையிலோ ஆகாயத்திலோ என்றில்லாமல் தன் மடியில் கிடத்தி, எவ்வித ஆயுதங்களையும் பயன் படுத்தாமல் தன் நகங்களாலேயே இரண்யன் வயிற்றைக் கிழித்தார். அவன் குடலை உருவி மாலையாக அணிந்துகொண்டு ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்து வதம் செய்து முடித்தார்.

தாங்கொணா உக்கிரத்தோடு இருந்த அவரை சாந்தப்படுத்த பிரகலாதனை அவரருகே அனுப்பினர். சற்று சாந்தம் கொண்டார் பெருமாள். பின் லட்சுமி தேவியை அனுப்பினர். முற்றிலும் உக்கிரம் நீங்கிய பெருமாள் லட்சுமியை மடியில் அமர்த்தியபடி சாந்த சொரூபராக- லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுத்தார். இவ்வாறு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர்.

நரசிம்மர் கோவில் கொண்டுள்ள சிறப்பான தலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அதில் ஆந்திர மாநிலத்திலுள்ள அகோபிலம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம் இதுதான். இரண்யன் ஆண்ட இடம், பிரகலாதன் வாழ்ந்த இல்லம், கல்வி கற்ற இடம் போன்றவை இங்கு உள்ளன. இரண்யன் வதை நடைபெற்ற அரண்மனையில் நரசிம்மர் வெளிப்பட்ட தூண் உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டார். புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள் ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது.

கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங் களும் சுயம்பு வடிவங்களே!

1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: "மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

மேலும் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில்- நாகார்ஜுனா அணைக்கும் விஜயவாடா நீர்த்தேக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் புகழ்பெற்ற ஐந்து நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. மங்களகிரி லட்சுமி நரசிம்மர், வாடப்பள்ளி நரசிம்மர், வேதாத்திடை யோக நரசிம்மர், மட்டப்பள்ளி லட்சுமி நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர் எனப்படும் சாளக்கிரம வீரலட்சுமி நரசிம்மர் ஆகிய தலங்களே அவை.

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

Tuesday, August 3, 2010

தமிழ்ப் பழமொழிகள்

) அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

2) அகல உழுகிறதை விட ஆழ உழு.

3) அகல் வட்டம் பகல் மழை.

4) அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

5) அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

6) அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

7) அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

8) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

9) அடக்கமே பெண்ணுக்கு அழகு.

10) அடாது செய்தவன் படாது படுவான்.

11) அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

12) அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

13) அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

14) அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

15) அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

16) அந்தி மழை அழுதாலும் விடாது.

17) அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

18) அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

19) அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

20) அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

21) அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூற்ற வேண்டும்.

22) அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

23) அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

24) அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

25) அழுத பிள்ளை பால் குடிக்கும்.

26) அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

27) அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

28) அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

29) அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

30) அறச் செட்டு முழு நட்டம்.

31) அற்ப அறிவு அல்லற் கிடம்.

32) அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

33) அறமுறுக்கினால் அற்றும் போகும்.

34) அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

35) அறிய அறியக் கெடுவார் உண்டா?

36) அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

37) அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

38) அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

39) அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

40) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

41) அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.

42) அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

43) அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

44) அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

45) அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

46) அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

47) அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

48) ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

49) ஆரால் கேடு, வாயால் கேடு.

50) ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

51) ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

52) ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

53) ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

54) ஆழமறியாமல் காலை இடாதே.

55) ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

56) ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

57) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

58) ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

59) ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

60) ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

61) ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

62) இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

63) இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

64) இஞ்சி இலாபம் மஞ்சளில்.

65) இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

66) இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

67) இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

68) இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

69) இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

70) இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

71) இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

72) இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

73) இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை.இராச திசையில் கெட்டவணுமில்லை.

74) இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

75) இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

76) இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

77) இருவர் நட்பு ஒருவர் பொறை.

78) இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

79) இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

80) இளங்கன்று பயமறியாது.

81) இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

82) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

83) இறங்கு பொழுதில் மருந்து குடி.

84) இறுகினால் களி , இளகினால் கூழ்.

85) இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

86) இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

87) இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே.

88) இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

89) ஈக்கு விஷம் தலையில், தேளுக்கு விஷம் கொடுக்கில்.

90) ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

91) ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

92) ஈர நாவிற்கு எலும்பில்லை.

93) ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

94) ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

95) ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

96) ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

97) ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

98) ஆனைக்கும் அடிசறுக்கும்.

99) உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

100) உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

101) உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

102) உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

103) உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

104) உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

105) உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

106) உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

107) உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

108) உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

109) உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

110) உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

111) உலோபிக்கு இரட்டை செலவு.

112) உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

113) உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

114) உளவு இல்லாமல் களவு இல்லை.

115) உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

116) உள்ளது போகாது இல்லது வாராது.

117) உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.

118) உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

119) உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

120) ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

121) ஊண் அற்றபோது உடலற்றது.

122) ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

123) ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

124) ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

125) ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

126) ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

127) எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?

128) எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. (நெருப்பில்லாது புகையாது)

129) எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

130) எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

131) எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

132) எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.

133) எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.

134) எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

135) எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.

136) எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

137) எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

138) எதார்த்தவாதி வெகுசன விரோதி.

139) எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

140) எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

141) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

142) எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.

143) எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

144) எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

145) எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

146) எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

147) எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.

148) எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

149) எலி அழுதால் பூனை விடுமா?

150) எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

151) எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

152) எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்.

153) எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

154) எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

155) எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

156) எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

157) எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

158) எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.

159) எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

160) எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

161) எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

162) எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.

163) எறும்பு ஊர கல்லுந் தேயும்.

164) எறும்புந் தன் கையால் எண் சாண்.

165) ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.

166) ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

167) ஏரி நிறைந்தால் கரை கசியும்.

168) ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.

169) ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

170) ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

171) ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம்.

172) ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

173) ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

174) ஐயர் வருகிற வரை அமாவாசை நிற்குமா?

175) ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

176) ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

177) ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

178) ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

179) கை தட்டினால் ஓசை எழும்புமா?

180) ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

181) ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

182) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

183) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

184) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

185) ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

186) ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

187) ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

188) ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

189) ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

190) ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

191) ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

192) ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

193) ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

194) ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

195) ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

196) ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

197) ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

198) ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

199) ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

200) கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?

201) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

202) கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

203) கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

204) கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

205) கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

206) கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

207) கடல் திடலாகும், திடல் கடலாகும்.

208) கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

209) கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

210) கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

211) கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

212) கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

213) கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

214) கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

215) கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

216) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

217) கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

218) கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

219) கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

220) கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

221) கண் கண்டது கை செய்யும்.

222) கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

223) கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

224) கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

225) கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

226) கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

227) கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

228) கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

229) கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

230) கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

231) கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

232) கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

233) கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.

234) கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

235) கரணம் தப்பினால் மரணம்.

236) கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

237) கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்.

238) கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

239) கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

240) கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

241) கல்லாடம் (நூல்) படித்தவனோடு மல் ஆடாதே.

242) கல்லாதவரே கண்ணில்லாதவர்.

243) கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

244) கல்வி அழகே அழகு.

245) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

246) கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

247) கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

248) கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

249) கள்ள மனம் துள்ளும்.

250) கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

251) கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.

252) கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

253) கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

254) களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

255) கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

256) கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

257) கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

258) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

259) கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

260) கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

261) கன்று செத்துக் கலப் பால் கறக்குமா?

262) கனிந்த பழம் தானே விழும்.

263) காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.

264) காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

265) காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

266) காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

267) காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

268) காணி ஆசை கோடி கேடு.

269) காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.

270) காப்பு சொல்லும் கை மெலிவை.

271) காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

272) காய்த்த மரம் கல் அடிபடும்.

273) காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

274) கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.

275) காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

276) காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

277) காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

278) காலம் போய் வார்த்தை நிற்கும், கப்பல் போய் துறை நிற்கும்.

279) காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

280) காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

281) காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

282) காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

283) காற்றில்லாமல் தூசி பறக்குமா?

284) காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

285) காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

286) கிட்டாதாயின் வெட்டென மற.

287) கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

288) குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

289) குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

290) குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

291) குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

292) குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

293) குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

294) குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

295) குணத்தை மாற்றக் குருவில்லை.

296) குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

297) குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

298) குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

299) குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

300) குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

301) குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

302) குப்பை உயரும் கோபுரம் தாழும்.

303) குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

304) கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

305) குரங்கின் கைப் பூமாலை.

306) குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

307) குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

308) குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

309) குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

310) குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே.

311) குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

312) குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

313) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

314) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்.

315) குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

316) கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

317) கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

318) கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

319) கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

320) கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

321) கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

322) கெட்டும் பட்டணம் சேர்.

323) கெடுக்கினும் கல்வி கேடுபடாது.

324) கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.

325) கெடுவான் கேடு நினைப்பான்.

326) கெண்டையைப் போட்டு வராலை இழு.

327) கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

328) கேட்டதெல்லாம் நம்பாதே நம்பியதெல்லாம் சொல்லாதே.

329) கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

330) கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

331) கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

332) கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

333) கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

334) கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.

335) கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்.

336) கையிலே காசு வாயிலே தோசை.

337) கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

338) கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

339) கொடிக்கு காய் கனமா?

340) கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

341) கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

342) கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

343) கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?

344) கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

345) கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

346) கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

347) கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

348) கோள் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

349) கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

350) கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

351) கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

352) கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

353) கோபம் சண்டாளம்.

354) கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

355) கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

356) கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

357) சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.

358) சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

359) சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

360) சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.

361) சர்க்கரை என்றால் தித்திக்குமா?

362) சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

363) சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

364) சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

365) சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

366) சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

367) சாண் ஏற முழம் சறுக்கிறது.

368) சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

369) சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

370) சாது மிரண்டால் காடு கொள்ளாது.

371) சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

372) சுக துக்கம் சுழல் சக்கரம்.

373) சுட்ட சட்டி அறியுமா சுவை.

374) சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

375) சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

376) சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

377) சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

378) சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

379) சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

380) சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

381) சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.

382) சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

383) சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

384) சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

385) சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

386) செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?

387) செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

388) செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

389) செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

390) செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

391) செயவன திருந்தச் செய்.

392) செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

393) செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

394) சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

395) சேற்றிலே செந்தாமரை போல.

396) சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

397) சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

398) சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

399) சொல் அம்போ வில் அம்போ?

400) சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

401) சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

402) சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

403) சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

404) சொல்வல்லவனை வெல்லல் அரிது.

405) சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

406) சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

407) சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

408) சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

409) தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

410) தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.

411) தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

412) தடி எடுத்தவன் தண்டல்காரனா?

413) தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.

414) தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

415) தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

416) தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

417) தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

418) தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

419) தருமம் தலைகாக்கும்.

420) தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

421) தலை இருக்க வால் ஆடலாமா?

422) தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

423) தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன?

424) தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

425) தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

426) தவளை தன் வாயாற் கெடும்.

427) தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

428) நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.

429) நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

430) நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!

431) நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

432) நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.

433) எமன்அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

434) எமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.

435) நயத்திலாகிறது பயத்திலாகாது.

436) நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

437) நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

438) நல்லது செய்து நடுவழியே போனால், நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

439) நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

440) நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.

441) நா அசைய நாடு அசையும்.

442) நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

443) நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா?

444) நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

445) நாய் விற்ற காசு குரைக்குமா?

446) நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.

447) நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

448) நாலாறு கூடினால் பாலாறு.

449) நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

450) நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

451) நித்திய கண்டம் பூரண ஆயிசு.

452) நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

453) நித்திரை சுகம் அறியாது.

454) நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

455) நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.

456) நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

457) நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.

458) நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

459) நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

460) நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

461) நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

462) நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

463) நூல் கற்றவனே மேலவன்.

464) நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

465) நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.

466) நூற்றைக் கொடுத்தது குறுணி.

467) நெய் முந்தியோ திரி முந்தியோ.

468) நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?

469) நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?

470) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

471) நேற்று உள்ளார் இன்று இல்லை.

472) நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

473) நொறுங்கத் தின்றால் நூறு வயது.

474) நோய் கொண்டார் பேய் கொண்டார்.

475) நோய்க்கு இடம் கொடேல்.

476) நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

477) பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

478) பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

479) பகைவர் உறவு புகை எழு நெருப்பு.

480) பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

481) பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.

482) பசியுள்ளவன் ருசி அறியான்.

483) பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

484) பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

485) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

486) பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

487) பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

488) பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.

489) படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

490) படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

491) படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

492) படையிருந்தால் அரணில்லை.

493) பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

494) பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.

495) பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

496) பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?

497) பணம் உண்டானால் மணம் உண்டு.

498) பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

499) பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

500) பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

501) பதறாத காரியம் சிதறாது.

502) பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

503) பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

504) பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

505) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

506) பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

507) பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

508) பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

509) பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

510) பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

511) பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

512) பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.

513) பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி. (சிவாஜி டயலாக்!)

514) பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

515) பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

516) பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

517) பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

518) புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

519) புத்திமான் பலவான்.

520) புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

521) புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

522) பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.

523) பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

524) பூவிற்றகாசு மணக்குமா?

525) பெண் என்றால் பேயும் இரங்கும்.

526) பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

527) பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

528) பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

529) பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

530) பேசப் பேச மாசு அறும்.

531) பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.

532) பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.

533) பேராசை பெருநட்டம்.

534) பொங்கும் காலம் புளி, மங்குங் காலம் மாங்காய்.

535) பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

536) பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

537) பொல்லாதது போகிற வழியே போகிறது.

538) பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

539) பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

540) பொறுமை கடலினும் பெரிது.

541) பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

542) போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

543) போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

544) போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

545) மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

546) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

547) மண்டையுள்ள வரை சளி போகாது.

548) மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

549) மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

550) மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுவோர்க்கு இடமும் கொடுக்கும்.

551) மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.

552) மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

553) மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

554) மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

555) மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

556) மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.

557) மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

558) மவுனம் கலக நாசம்.

559) மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

560) மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

561) மனம் உண்டானால் இடம் உண்டு. (மனமிருந்தால் மார்க்கம் உண்டு)

562) மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

563) மனம் போல வாழ்வு.

564) மனமுரண்டிற்கு மருந்தில்லை.

565) மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.

566) மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

567) மாடம் இடிந்தால் கூடம்.

568) மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

569) மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

570) மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

571) மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

572) மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

573) மாரடித்த கூலி மடி மேலே.

574) மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

575) மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

576) மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

577) மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

578) மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

579) முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

580) முகத்துக்கு முகம் கண்ணாடி.

581) முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

582) முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.

583) முதல் கோணல் முற்றுங் கோணல்.

584) முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

585) முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

586) முருங்கை பருத்தால் தூணாகுமா?

587) முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

588) முன் ஏர் போன வழிப் பின் ஏர்.

589) முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

590) முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

591) முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

592) மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.

593) மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

594) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

595) மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

596) மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

597) மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

598) வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

599) வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

600) வடக்கே கருத்தால் மழை வரும்.

601) வட்டி ஆசை முதலுக்கு கேடு.

602) வணங்கின முள் பிழைக்கும்.

603) வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

604) வருந்தினால் வாராதது இல்லை.

605) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

606) வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

607) வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

608) வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.

609) வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.

610) .வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

611) வாழ்வும் தாழ்வும் சில காலம்.

612) விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

613) விதி எப்படியோ மதி அப்படி.

614) வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?

615) விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

616) விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

617) வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

618) விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

619) விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

620) விளையும் பயிர் முளையிலே தெரியும்.

621) வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.

Monday, August 2, 2010

பிடல் காஸ்ட்ரோ...




1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு

1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.

1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.

1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.

1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.

1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.

1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.

1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.

1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.

1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.

1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.

1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.

1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.

1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.

1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.

1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.

2000 - ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!

2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.

2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.

2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.




Saturday, July 31, 2010

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Friday, July 30, 2010

அவ்வையார் நூல்கள்

ஆத்திசூடி



பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. உயர்ந்த ஒழுக்க விதைகள் மனத்தின் ஊன்றுவதற்காக அவ்வையாரல் எழுதப்பெற்றன.



கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.



நூல்



உயிர் வருக்கம்


1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்



உயிர்மெய் வருக்கம்


14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல்வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணககம்அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம்ஆடேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்



ககர வருக்கம்


32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப்பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கௌவை அகற்று




சகர வருக்கம்


44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்திரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சை எனத் திரியேல்
53. சொல் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்




தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்




நகர வருக்கம்


66. நன்மை கடைப்பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நூல் பல கல்
72. நெல் பயிர் விளை
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடம் கொடேல்



பகர வருக்கம்


77. பழிப்பன பகரேல்
78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
82. பூமி திருத்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் புரியேல்




மகர வருக்கம்


88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீதூண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93 மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள் சேர்
95. மேன் மக்கள் சொல் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அற மொழி
98. மோகத்தை முனி




வகர வருக்கம்


99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடு பெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்
107. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரைத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்




ஆத்தி சூடி முற்றிற்று.


கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.



நூல்



உயிர் வருக்கம்


1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு




ககர வருக்கம்


14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை





சகர வருக்கம்


26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்




தகர வருக்கம்


37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்




நகர வருக்கம்


48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை



பகர வருக்கம்


59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்




மகர வருக்கம்


70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு




வகர வருக்கம்


81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்




கொன்றை வேந்தன் முற்றிற்று.


நல்வழி



வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் இப்பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.


கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.



நூல்


புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1


சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2


இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3


எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5


உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6


எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7


ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8


ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10


ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11


ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12


ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13


பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14


சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15


தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16


செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17


பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18


சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19


அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20


நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22


வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23


நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27


உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28


மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30


இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31


ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32


வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34


பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35


நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37


நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38


முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39


தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40





நல்வழி முற்றிற்று.


மூதுரை

வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன.


கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



நூல்


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால். 1


நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2


இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3


அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4


அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5


உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான். 6


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10


பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11


மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம். 13


கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14


வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம். 15


அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16


அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு. 17


சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன். 19


உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு. 20


இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21


எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22


கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24


நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25


மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 26


கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். 27


சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று? 28


மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம். 29


சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30





மூதுரை முற்றிற்று.

ஞானக்குறள்

இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. 310 குறள்களையுடையது.



•1. வீட்டுனெறிப்பால்
◦1.மோட்சம் செல்லும் வழி
◦2. உடம்பின் பயன்
◦3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
◦4. நாடி தாரணை
◦5. வாயுதாரணை
◦6. அங்கிதாரணை
◦7. அமுததாரணை
◦8. அர்ச்சனை
◦9. உள்ளுணர்வு
◦10. பத்தியுடைமை
◦11. அருள் பெறுதல்
•2. திருவருட்பால்
◦12. நினைப்புறுதல்
◦13. தெரிந்து தெளிதல்
◦14. கலை ஞானம்
◦15.உருவொன்றி நிற்றல்
◦16. முத்தி காண்டல்
◦17. உருபாதீதம்
◦18. பிறப்பறுதல்
◦19.தூயவொளி காண்டல்
◦20. சதாசிவம்
◦21. குருவழி
◦22. அங்கியில் பஞ்சு
◦23. மெய்யகம்
◦24. கண்ணாடி
◦25. சூனிய காலமறிதல்
◦26. சிவயோக நிலை
•3. தன்பால்
◦27. ஞான நிலை
◦28. ஞானம் பிரியாமை
◦29. மெய்நெறி
◦30. துரிய தரிசனம்
◦31. உயர்ஞான தரிசனம்


விநாயகர் அகவல்



பக்திக்கால இறுதியில் வெளியான நூல். இந்த நூலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. இதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்



நூல்


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . 4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 12

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே . 24


உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . 28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 36

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 48

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து . 56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே . 72




விநாயகர் அகவல் முற்றிற்று.

108 சித்தர்கள் + ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர் திருகாளத்தி ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம் திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம் கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை துவாரகை விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம் அழகர் கோவில் இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம் திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர் கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி திருவாவடுதுறை காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி திருவாவடுதுறை காளங்கி.
33. கௌதமர் - திருவருணை திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம் திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர் திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர் சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர் கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.