Saturday, April 13, 2013

காகபுசுண்டர் குறள்


IV. காகபுசுண்டர் குறள்

குறள் வெண்பா

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு                                               

அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.      
 

வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

 
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

 
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு


 சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.


 சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.


கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.


விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.


நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.


உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.


கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.


ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.


முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.


யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.


வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.


காகபுசுண்டர் காவியம் 33


காகபுசுண்டர் காவியம் 33 காப்பு கணபதியே அடியாகி அகில மாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக் குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக் கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப் பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே. நூல் எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்; எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும் பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ? சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்; தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ? சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே. 1 புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப் பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும் சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள் சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள் பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற் பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான் அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன் அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே. 2 கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற் கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி, வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ கோளப்பா செயகால லயந்தா னெங்கே? குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே? ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே? அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே. 3 இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில் எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்; பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே? 4 எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக் கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே! காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே! சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே! மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே! மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே. 5 அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா! அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால் பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா! போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும் நெறியாக இவ்வகைநா னறிவே னையா! நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்; புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர் பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார். 6 மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே! வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்; சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும் சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான் அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா! அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம் இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன் இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர். 7 கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா? ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்! காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார் கருவேது நீயறிந்த வாறு மேது! பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே. 8 பரமான பரமகயி லாச வாசா! பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித் தரமான புசுண்டமுனி யந்த வேள சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார் சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான் வரமான வரமளித்த சூரன் வாழ்வே வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே. 9 தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன செகமான செகமுழுது மாண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின் உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே. 10 காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர் எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத் தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார். சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்! பாகமுடன் எட்டான விவரந் தன்னைப் பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே. 11 பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர் பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்! சத்தான சத்துகளு மடங்கும் காலம் சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம் சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார் முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே. 12 முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர் முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்! களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்; கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன? கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார் கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே. 13 வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்; வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும் அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார் அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார் சந்தேக முமக்குரைக்கப் போகா தையா! சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே. 14 வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர் என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார். மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா! மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்; சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா சிவசிவா இன்னதென்று செப்பி டீரே? 15 செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்; கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம் குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே? அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே? அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே? ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே? ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே! 16 உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு; உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்; பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்; இரையென்றால் வாய்திறந்து பட்சி போல எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்; நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால் நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே? 17 கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி; கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்; உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால் யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்; விள்ளாமற் றீராது முனிவனே! கேள்; மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி; தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச் சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே? 18 சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும் தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு; மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்; வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்? சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத் திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்; ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே. 19 கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்; பரமான மவுனமது பரத்திற் சாடும்; ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்தசதா சிவமோடி மணியில் மீளும் கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார் ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே. 20 கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான் சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ் சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்; சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்; நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்; நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே. 21 காண்பேனே நாகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும் குருவான சுடரோடி மணியிற் புக்கும் நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும் நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே. 22 கேளப்பா சிவமோடி அண்டம் பாயும் கிருபையா யண்டமது திரும்பிப் பாயும் கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான் குருவான தசதீட்சை யொன்று மாச்சு மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்; ஆளப்பா நரைத்தமா டேறு வோனே! அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே. 23 அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி! அரகரா உன்போல முனியார் காணேன்; தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா; பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும் பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா! பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே. 24 பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே! பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்; குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்; தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச் சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய் அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய் அரகரா கண்ணாடி லீலை தானே. 25 லீலைபொற் காணுமுகம் போலே காணும் நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்; ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே அரகரா சக்கரங்க ளாறுங் காணும் வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணுஞ் சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமுங் காணே. 26 பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்; நிரத்திலே சடமதனில் யகாரங் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும் வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும் வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும் நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும் நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே. 27 பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால் பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம் சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை; கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக் காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும் இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி. 28 இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம் இருவருக்கும் நடுவான திவளே மூலம் தொடக்காக நின்றவளு மிவளே மூலம் சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம் அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம் ஐவருக்குங் குருமூல மாதி மூலம் கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே. 29 கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின் மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே! உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம் ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள் கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே. 30 வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே மாதுகலி யாணியென வசனித் தார்கள் வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும் மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும் வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும் வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர் வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே. 31 அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தி னீறு பூசிப் பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப் பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த் தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச் செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித் திருளீவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே. 32 பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்; காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங் கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகங் கேளு ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே. 33

காகபுசுண்டர் உபநிடதம் - 31 -2


விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள் விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு; தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந் துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும் எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத் தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி; தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற் சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம். 11 சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்; சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்; தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள் சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்; காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற் காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே. 12 கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக் காணாது சீவான்மா பரமான் மாவும்; தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச் சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம் யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை; விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால் விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே. 13 வீணல்லோ சாதனப்ர யோச னங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது? வீணல்லோ வேதபா டத்தி னிச்சை வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்? வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும் வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்? மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே. 14 வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும் வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும் காணுகின்ற பூவிலுறை வாசம் போலும் கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும் தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும் தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்; ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே. 15 அரிதில்லை பிரமவியா கிருத சீவன் ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச் சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக் குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால் குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும் திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது; சீவவை ராக்யமெனுந் திறமி தானே. 16 திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம் திருசியசூன் யாதிகளே தியான மாகும்; சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதியெனத் தானே போகும்; வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்; அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான் அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே. 17 என்னவே அஞ்ஞானி உலகா சாரத் திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள் முன்னமே செய்ததன்பின் மரண மானால் மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல் வின்னமதா யாங்கார பஞ்ச பூத விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச் சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே. 18 தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ் சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்; ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார் வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே. 19 ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்; மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்; கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம் குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்; பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே. 20 பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன் பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன் வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன் தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்; சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்; ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்; ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே. 21 யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே. 22 மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா; சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம் சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்; தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில் சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்; மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை மூலவிந்து களாதீத மொழிய லாமே. 23 மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின் மோனபிரா ணாதியதே நாத மாச்சு; தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற் சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்; ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம் உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான் வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே. 24 விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 25 பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. 26 கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம் கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்; விண்ணான பெருவெளிக்கு ளீன மானால் விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்; ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்; அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்? அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே; 27 அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக் குறைவில்லை ஓங்கார மூல வட்டக் குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான் நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு நீக்காம லேகமாய் நிர்ண யித்துப் பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப் பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே. 28 புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும் பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான் துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச் சுபாவசா தனையினால் மவுன மாச்சு; விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு; விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு; மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு; வத்துவதே காரணமா மகிமை யாச்சே. 29 மகிமையென்று யோகசா தனையி னாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே; அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே; அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம் சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில் சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு; பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு; பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே. 30 பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம் தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால் சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில் முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான் மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான் நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே. 31

காகபுசுண்டர் உபநிடதம் - 31 -1


II. காகபுசுண்டர் உபநிடதம் - 31 காப்பு எண்சீர் விருத்தம் ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு; அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு; நீதியா மாரூட ஞானம் பெற்ற நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு; சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற் துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத் தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார் சீவேச ஐக்யமது தெரியுந் தானே. நூல் தானென்ற குருவினுப தேசத் தாலே தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்; வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்; மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்; நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்; கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே. 1 பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்? பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்; ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும் சாருமிந்த வுபாதான காரணத்தின் சம்பந்த மில்லாத சாட்சிதானே. 2 சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச் சட்சுமனத் தாலறியத் தகாது யாதும் சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச் சகலவந்தர் யாமித்வ சர்வ பூத சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம் சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ் சத்தாதி பிரமாதி தானே சொல்வாம். 3 சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன் தூலகா ரணப்பிரமந் துரியா தீதம் அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம் அம்சோகம் அசபாமந் திரத்தி யானம் செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச் சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம். 4 பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும் பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும் கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும் கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும் வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும் தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன் தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே. 5 சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம் தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு விவகார சீவனிதை விராட்டென் பார்கள்; வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம் விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு; தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே. 6 கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து தள்ளடா பிராணாதி வாயு வைந்து சார்வான மனம்புத்தி தானி ரண்டு விள்ளடா பதினேழு தத்து வங்கள் விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத் துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ் சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே. 7 நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள் நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு? காலான கண்டமெனுந் தானத் துள்ளே கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்? நாலான ஆன்மாவே அந்த ரான்மா ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு; தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே. 8 தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத் தானமதே இதயமா ஞான சத்தி வானமதே அகங்காரம் வித்தை யாகில் வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும் கோனிதற்கே ஆனந்த போக மாகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம் கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக் காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே. 9 கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு; தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி விள்ளுமந்தப் படிதானே வேத பாடம் விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே. 10

காகபுசுண்டர் ஞானம் 80-7


தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான் கோனென்ற பிரமத்தி லடக்க மாகக் குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க வானொன்றிப் போகுமடா பாணம் பாணம் மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்; தேனென்ற சட்டை களுங் கழன்று போகும் தேனுக்குந் தேவனா யிருக்க லாமே. 52 இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும் ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில் பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும் பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல் குணமான மூவரைப் போற்பிரமத் தூடே திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள் செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே. 53 தானவனே யென்குருவே புசுண்ட நாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம் தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந் துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர் கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங் குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர் தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே. 54 சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா! சத்தியமா யண்டத்திற் செல்லும் போது போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப் புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்; மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம் மைந்தனே! அபுரூப மாகு மப்பா! வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால் வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே. 55 ஆச்சென்ற அபுரூப மான போதே அட்டமா சித்திவகை யெட்டு மாடும்; மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்; காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு கலைமாறி நின்றிடமே கனக பீடம் நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால் நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே. 56 மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான் மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா! காக்கவே சற்குருவின் பாதங் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித் தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச் சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே. 57 இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில் உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே உத்தமனே காயமது வுறுதி யாச்சு; மருக்கியே திரியாமல் மதம்பே சாமல் வண்டரோ டிணங்கியடா மருவி டாமல் குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற் குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே. 58 பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி! பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும் சீரென்று சொப்பனங்க ளதிக மாகத் திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும் காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும் கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும் வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும் வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே. 59 வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு; மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில் ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்; மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால் காயான சுழுத்தியென் றிதற்கு நாமம் கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே. 60 தானென்ற பலரூப மதிகங் காணுந் தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும் ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும் கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே. 61 நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு; நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு தலையான அக்கினியப் படியே சேரு; சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து மலையாமல் ஏகபரா பரனே யென்று மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க அலையாது மனந்தானும் பரத்திற் சென்று ஆகாய வீதிவழி யாட்டும் பாரே. 62 ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும் பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப் பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக் காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும் வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே. 63 போமடா புத்திசித்தம் என்ற தாகிப் புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில் ஆமடா வடசாளி மைந்த னென்றும் அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும் நாமடா ஐந்துபேர் தம்மி லேதான் நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா! வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே. 64 பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு; பார்தனிலே பிரமனுடை விந்து வாலே; ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்; ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்; நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்; வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள் விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே. 65 காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. 66 நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம் நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம் கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம் குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம் வாடியே வத்தோடே சேராத் தோஷம் வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம் கூடியே வுறவற்றே யிருந்த தோஷம் கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி. 67 அறியாத பாவிக்கு ஞான மேது? ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு; பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை; பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு; விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம் வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா! குறியான அண்டமதை யொளித்தே விட்டார் கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே. 68 குற்றமது வையாமல் அண்டத் தேகிக் கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச் சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம் தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக் குற்றமது வையாமல் மனமன் பாலே குருபரனை நோக்கியடா தவமே செய்து பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது பராபரையுங் கைவசமே யாகு வாளே. 69 ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால் அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும் ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்; போகுமே நீ செய்த காமமெல் லாம் புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே; வாகுமே வழியோடே சேர்த்தா யானால் வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே. 70 பாரடா வாணியுந்தா னிருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்; ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே அண்டத்தைப் பற்றியடா விழுது போலே நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி தன்னில் வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே. 71 சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம் சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுன மாகி அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை ஆரறிவா ருலகத்தி லையா பாரு சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச் சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு. 72 வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா! தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத் தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ் சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே. 73 பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா! பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய் ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில் அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான் நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம் நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு வீரப்பா நீருமடா நவலோ கந்தான் வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே. 74 ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம் அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்; வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு; மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும் முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே. 75 பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப் பாசையடா பேசாம லரைத்து மைந்தா! பாலகனே சவாதோடு புனுகு சேரே. 76 சேரடா அணுப்போலே புருவத் திட்டுத் தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில் ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்? அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே. 77 வாரான தில்லைப்பால் கருந்து ளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ் சீராக முன்சொன்ன கருவை விட்டுத் திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க வீராகப் பாதாளம் பிளந்தே யோடும் வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே. 78 பாரடா பரப்பிரமத் தூடே சென்று பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய் நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான். கூரடா கோடானு கோடி சித்துக் குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே. 79

காகபுசுண்டர் ஞானம் 80-6


ஒன்றான பிரமமே வெவ்வே றாக உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு; நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு; குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு; குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. 32 நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்! பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான் காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்; கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார் கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே. 33 குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும் கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான் அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப் பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே. 34 பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி; பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்; ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான் ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்; நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு; நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு; வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான் விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே. 35 வானென்ற அண்டமதிற் சென்று புக்கு வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில் தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக் கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக் கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு தேனென்ற சித்தமே புத்தி யாகத் தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. 36 பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ் சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள் செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய் காரண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்; வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. 37 கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக் கூத்தாடித் திரியாமற் கவன மாகப் பாடுது பலநூலைப் படித்தி டாமற் பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல் வாடாத தீபத்தை யறிந்து பாரே. 38 பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர் வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி விராட பிரம மொன்றியா யிருக்கும் போது சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே? சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே? கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே? குருபரனே! இந்தவகை கூறு வீரே. 39 கூறுகிறே னென்மகனே வாசி நாதா குணமான வீச்சுரனார் சபையிற் கூடித் தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற் சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும் வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக் கார்மேக மேனியனங் கவரை நோக்கிக் கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே. 40 கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில் ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன். வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று வலவனுடன் மாலானும் உரைக்கும் போது சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச் சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே. 41 பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப் பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ் சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந் திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற் கூடியே அடைந்திருப்பார் குணம தாக வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால் வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே. 42 பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல் அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்; நேரப்பா நெடுந்தூரம் போகும் போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்; வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும் வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே. 43 இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம் என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா! உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்; ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம் புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம் மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. 44 பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்; ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும் வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும் விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச் சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே. 45 பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில் பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம் நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமி தானும் சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ் சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே. 46 வாறான தெய்வமென்றும் பூத மென்றும் வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும் கூறான மாமேரு கிரிக ளென்றும் கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி நேராகப் பிரமமே சாட்சி யாக நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா! வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே; 47 கேளப்பா இப்படியே பிரள யந்தான் கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால் ஆளப்பா அரியயனும் சீவ செந்தும் அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்; நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்; நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால் வாளப்பா காகமென்ற ரூப மானேன் வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. 48 பாரடா இப்படியே யுகங்கள் தோறும் பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ? ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன் வீரடா விமலரிடஞ் செல்லும் போது வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்; காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்! காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. 49 காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50 மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம் சக்தியும் ஆவியுடையு மான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம் புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம் எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏகபர மானதொரு லிங்கந் தானே. 51

காகபுசுண்டர் ஞானம் 80-5


தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும். உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந் திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 16 பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப் பாடுவா னொருகாலைத் தாழ விட்டே ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய் என்மகனே மதியென்ப ததற்குப் பேரு கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா கண்டுபார் ரவியென்று கருத லாகும் மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17 பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18 காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் தோணாமல் நானலைந்து சிறிது காலம் துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான் நாடியே மனத்தாலே நாட்ட மாகக் கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 19 இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20 விளையாடிப் போதமய மாக வுந்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி அலையாம லாரொருவ ருறவு மற்றே ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 21 நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான் வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள் மந்திரங்கள் கோடானு கோடி யென்றும் சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந் திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான் வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 22 பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான் வீரப்பா நீராட்டிப் பூசை செய்து வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள் தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 23 தானென்ற பிரமத்தை யடுத் திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும் உதயகிரி பாராத வுலுத்த மாடு வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக் கோனென்ற குருபாதம் அடைய மாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 24 பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப் பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும் அடயோக மென்பார்க ளாகா தப்பா! சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும் வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 25 அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே. 26 தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. 27 விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்; அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே. 28 கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக் கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால் தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய் தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. 29 பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா! ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்; நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள் நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால் வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும் வேறில்லாக் கனிதனையு முண்க லாமே. 30 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. 31

காகபுசுண்டர் ஞானம் 80-4


காப்பு

எண்சீர் விருத்தம்
சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
     தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
     பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
     மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
     சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.
1  

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி 
     ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
     நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
     வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
     காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.
2 

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
     பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
     திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
     அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
     விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.
3

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
     கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
     பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
     விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
     சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.
4 

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
     தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
     மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
     புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
     வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.
5

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
     கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
     அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
     வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
     நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
6 

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
     காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
     பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
     தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
     அண்டமடா அனந்தனந்த மான வாறே.
7

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
     வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
     கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
     வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
     நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
8

 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
     பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
     அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
     கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
     வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
9

 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
     கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
     நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
     வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
     சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
10

 பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
     பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
     நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
     மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
     கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
11

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
     பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
     அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
     நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
     உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
12 

பாரான சாகரமே அண்ட வுச்சி
     பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
     சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
     விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
     கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.
13 

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
     கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
     சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
     வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
     குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
14 

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
15

காகபுசுண்டர் ஞானம் 80-3


 சித்தர்களுக்குச்  சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.
“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை 
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”
     இவர்  அத்வைத  கொள்கையில்  உறுதியுடையவர்  என்பது  இவரது
ஞானப்பாடல்களால்  புலனாகிறது.   சித்தர்கள்  பெரும்பாலும்  அத்வைதக்
கொள்கையினர்  என்பது  ஆய்வாளர்  முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல.  இரண்டும்  ஒன்றேதான்.   இதை  உணர்வதுதான்  மெய்ஞானம்.
தன்னையும்  பரமத்தையும்  ஒன்றாக  அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,
     பரமான்மா  என்பது  சூட்சுமப்  பொருள்;  அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப்  பொருள்  என்றும் அதைக்  கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண  வேண்டுமானால்  உன்  உடம்பிலேயே  அதனை  அறிந்து  கொள்ள
வேண்டும்.
     இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம்  ஒன்று  அடங்கியிருக்கும்  சூட்சுமத்தையும்  பசுவின்  பாலிலே நெய்
கலந்திருக்கின்ற  தன்மையையும்  பூவினுள்வாசனை  கலந்திருக்கின்ற  நிறம்
கலந்திருக்கின்ற  உத்தியையும்,  மயில்  முட்டையில்  அழகான பலவண்ண
தோகை  ஒளிந்திருக்கின்ற  ரகசியத்தையும்  நீ  உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.

அகங்காரம்  காரணமாக  இதை  மறந்து  இதைக்  கண்டறிவதற்கான
சாதனத்தையும்  நீ  மறந்து  விடுவாயானால்  உனக்கு  அபரோட்ச ஞானம்
கிட்டாது.  பரமாத்மாவுடன்   ஒன்று  மட்டும்  முக்தி  நிலையும்  உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
     வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
     கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
     தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
     அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

     காகபுசுண்டரின்  ஞானப்பாடல் அனைத்துமே  அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது.  காகபுசுண்டர்  உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

     யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
     ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
 அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,

“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
 வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.


காகபுசுண்டர் ஞானம் 80-2 ,


“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
     தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)
வரிகளில் சுட்டிக்காட்டி,
“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”
என்று   வாசியோக   மார்க்கத்தை   இறைவனை  அடையும்  மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.
“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
     அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
     பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
     விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
     கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று  வாசியோகத்தின்  மூலம்  குண்டலி  யோகம்  செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,
“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
     சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
     ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
     ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே

காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
     காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”
“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
     வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
     மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
     அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
     கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)
     இது  மனம்  காமவயப்படாமல்  வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.
     இவர்  கூறும்  இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,
“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
     நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
     வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”
என்று  சுழுமுனைக்கு  விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,
“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
     என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)
என்று கூறுகின்றார்.
     வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,
“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
     சத்தியமா யண்டத்திற் செல்லும் போது

போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
     புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
     மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
     வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)
     இவர்  உலகில்  நிலவும்  சாதி  வேற்றுமையைத்  தம்  பாடல்களில்
வெகுவாகக்    கண்டித்துள்ளார்.    குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.
“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
 பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

காகபுசுண்டர் ஞானம் 80 1



                          காகபுசுண்டர் ஞானம் 80 


 கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும் கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. 
“இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்?
 பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.
 எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.  மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான் கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப வேண்டும்” என்றார். தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும் விஷ்ணுவைக் கேட்டனர். பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும் வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன். என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால் அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு. இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர் ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார். முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக் களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில் கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும் மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச் சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட, இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன. வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு தெரிவிக்கின்றது. காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா? வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும் உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம். இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்; எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம். உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி சிதம்பரனார் கூறுகின்றார். இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது. “காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்” என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது. தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று அலைந்து திரிகின்றனரே என்பதை,