Sunday, December 2, 2012

மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள் ( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் ) ( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் ) 365 தேவர்களின் நாள் = 1 தேவர்களின் வருடம் 4800 தேவர்களின் வருடம் = கிருத யுகம் / சத்ய யுகம் 3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம் 2400 தேவர்களின் வருடம் = துவப்பார யுகம் 1200 தேவர்களின் வருடம் = கலி யுகம் 12000 தேவர்களின் வருடம் = 1 சதூர் யுகம் 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது 14 மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள் ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம் பிரம்மா வின் ஒரு பகல் + பிரம்மா வின் ஒரு இரவு = பிரம்மா வின் ஒரு நாள் பிரம்மா வின் 365 நாட்கள் = பிரம்மா வின் ஒரு வருடம் பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள் பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின் அழிவு ) பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான் விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும். கல்பம் / உருவாக்கம் = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் ப்ரலயம் / அழிவு = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை நடப்பது ஒரு கல்பம் ஆகும். சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள் திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள் துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள் கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள் ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும். ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.