Saturday, April 13, 2013

காகபுசுண்டர் ஞானம் 80-6


ஒன்றான பிரமமே வெவ்வே றாக உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு; நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு; குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு; குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. 32 நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்! பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான் காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்; கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார் கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே. 33 குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும் கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான் அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப் பார்தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே. 34 பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி; பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்; ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான் ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்; நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு; நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு; வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான் விதியாலே முடிந்ததென்று விளம்பு வானே. 35 வானென்ற அண்டமதிற் சென்று புக்கு வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில் தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக் கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக் கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு தேனென்ற சித்தமே புத்தி யாகத் தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. 36 பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ் சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள் செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய் காரண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்; வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. 37 கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக் கூத்தாடித் திரியாமற் கவன மாகப் பாடுது பலநூலைப் படித்தி டாமற் பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல் வாடாத தீபத்தை யறிந்து பாரே. 38 பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர் வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி விராட பிரம மொன்றியா யிருக்கும் போது சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே? சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே? கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே? குருபரனே! இந்தவகை கூறு வீரே. 39 கூறுகிறே னென்மகனே வாசி நாதா குணமான வீச்சுரனார் சபையிற் கூடித் தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற் சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும் வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக் கார்மேக மேனியனங் கவரை நோக்கிக் கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே. 40 கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில் ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன். வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று வலவனுடன் மாலானும் உரைக்கும் போது சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச் சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே. 41 பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப் பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ் சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந் திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற் கூடியே அடைந்திருப்பார் குணம தாக வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால் வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே. 42 பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல் அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்; நேரப்பா நெடுந்தூரம் போகும் போது நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்; வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும் வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே. 43 இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம் என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா! உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்; ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம் புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம் மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே. 44 பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்; ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும் வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும் விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச் சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே. 45 பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில் பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம் நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமி தானும் சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ் சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள் வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே. 46 வாறான தெய்வமென்றும் பூத மென்றும் வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும் கூறான மாமேரு கிரிக ளென்றும் கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி நேராகப் பிரமமே சாட்சி யாக நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா! வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே; 47 கேளப்பா இப்படியே பிரள யந்தான் கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால் ஆளப்பா அரியயனும் சீவ செந்தும் அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்; நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்; நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால் வாளப்பா காகமென்ற ரூப மானேன் வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே. 48 பாரடா இப்படியே யுகங்கள் தோறும் பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ? ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன் வீரடா விமலரிடஞ் செல்லும் போது வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்; காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்! காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே. 49 காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்; மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க நாகரீக மாகவுந்தா னண்ட மேவி நடுவணைய முச்சிநடு மத்தி தானே. 50 மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம் சக்தியும் ஆவியுடையு மான லிங்கம் சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம் புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம் பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம் எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏகபர மானதொரு லிங்கந் தானே. 51

காகபுசுண்டர் ஞானம் 80-5


தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும். உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந் திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 16 பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப் பாடுவா னொருகாலைத் தாழ விட்டே ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய் என்மகனே மதியென்ப ததற்குப் பேரு கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா கண்டுபார் ரவியென்று கருத லாகும் மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17 பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18 காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் தோணாமல் நானலைந்து சிறிது காலம் துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான் நாடியே மனத்தாலே நாட்ட மாகக் கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 19 இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20 விளையாடிப் போதமய மாக வுந்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி அலையாம லாரொருவ ருறவு மற்றே ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 21 நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான் வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள் மந்திரங்கள் கோடானு கோடி யென்றும் சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந் திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான் வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 22 பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான் வீரப்பா நீராட்டிப் பூசை செய்து வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள் தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 23 தானென்ற பிரமத்தை யடுத் திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும் உதயகிரி பாராத வுலுத்த மாடு வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக் கோனென்ற குருபாதம் அடைய மாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 24 பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப் பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும் அடயோக மென்பார்க ளாகா தப்பா! சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும் வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 25 அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே. 26 தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. 27 விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்; அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே. 28 கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக் கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால் தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய் தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. 29 பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா! ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்; நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள் நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால் வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும் வேறில்லாக் கனிதனையு முண்க லாமே. 30 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. 31

காகபுசுண்டர் ஞானம் 80-4


காப்பு

எண்சீர் விருத்தம்
சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
     தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
     பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
     மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
     சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.
1  

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி 
     ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
     நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
     வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
     காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.
2 

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
     பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
     திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
     அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
     விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.
3

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
     கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
     பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
     விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
     சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.
4 

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
     தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
     மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
     புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
     வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.
5

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
     கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
     அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
     வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
     நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
6 

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
     காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
     பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
     தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
     அண்டமடா அனந்தனந்த மான வாறே.
7

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
     வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
     கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
     வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
     நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
8

 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
     பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
     அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
     கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
     வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
9

 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
     கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
     நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
     வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
     சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
10

 பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
     பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
     நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
     மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
     கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
11

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
     பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
     அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
     நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
     உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
12 

பாரான சாகரமே அண்ட வுச்சி
     பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
     சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
     விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
     கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.
13 

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
     கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
     சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
     வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
     குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
14 

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
15

காகபுசுண்டர் ஞானம் 80-3


 சித்தர்களுக்குச்  சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.
“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை 
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”
     இவர்  அத்வைத  கொள்கையில்  உறுதியுடையவர்  என்பது  இவரது
ஞானப்பாடல்களால்  புலனாகிறது.   சித்தர்கள்  பெரும்பாலும்  அத்வைதக்
கொள்கையினர்  என்பது  ஆய்வாளர்  முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல.  இரண்டும்  ஒன்றேதான்.   இதை  உணர்வதுதான்  மெய்ஞானம்.
தன்னையும்  பரமத்தையும்  ஒன்றாக  அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,
     பரமான்மா  என்பது  சூட்சுமப்  பொருள்;  அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப்  பொருள்  என்றும் அதைக்  கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண  வேண்டுமானால்  உன்  உடம்பிலேயே  அதனை  அறிந்து  கொள்ள
வேண்டும்.
     இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம்  ஒன்று  அடங்கியிருக்கும்  சூட்சுமத்தையும்  பசுவின்  பாலிலே நெய்
கலந்திருக்கின்ற  தன்மையையும்  பூவினுள்வாசனை  கலந்திருக்கின்ற  நிறம்
கலந்திருக்கின்ற  உத்தியையும்,  மயில்  முட்டையில்  அழகான பலவண்ண
தோகை  ஒளிந்திருக்கின்ற  ரகசியத்தையும்  நீ  உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.

அகங்காரம்  காரணமாக  இதை  மறந்து  இதைக்  கண்டறிவதற்கான
சாதனத்தையும்  நீ  மறந்து  விடுவாயானால்  உனக்கு  அபரோட்ச ஞானம்
கிட்டாது.  பரமாத்மாவுடன்   ஒன்று  மட்டும்  முக்தி  நிலையும்  உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
     வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
     கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
     தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
     அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

     காகபுசுண்டரின்  ஞானப்பாடல் அனைத்துமே  அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது.  காகபுசுண்டர்  உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

     யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
     ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
 அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,

“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
 வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.


காகபுசுண்டர் ஞானம் 80-2 ,


“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
     தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)
வரிகளில் சுட்டிக்காட்டி,
“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”
என்று   வாசியோக   மார்க்கத்தை   இறைவனை  அடையும்  மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.
“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
     அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
     பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
     விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
     கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று  வாசியோகத்தின்  மூலம்  குண்டலி  யோகம்  செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,
“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
     சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
     ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
     ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே

காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
     காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”
“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
     வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
     மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
     அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
     கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)
     இது  மனம்  காமவயப்படாமல்  வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.
     இவர்  கூறும்  இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,
“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
     நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
     வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”
என்று  சுழுமுனைக்கு  விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,
“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
     என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)
என்று கூறுகின்றார்.
     வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,
“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
     சத்தியமா யண்டத்திற் செல்லும் போது

போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
     புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
     மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
     வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)
     இவர்  உலகில்  நிலவும்  சாதி  வேற்றுமையைத்  தம்  பாடல்களில்
வெகுவாகக்    கண்டித்துள்ளார்.    குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.
“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
 பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

காகபுசுண்டர் ஞானம் 80 1



                          காகபுசுண்டர் ஞானம் 80 


 கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும் கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. 
“இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்?
 பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.
 எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.  மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான் கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப வேண்டும்” என்றார். தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும் விஷ்ணுவைக் கேட்டனர். பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும் வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன். என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால் அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு. இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர் ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார். முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக் களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில் கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும் மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச் சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட, இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன. வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு தெரிவிக்கின்றது. காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா? வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும் உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம். இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்; எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம். உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி சிதம்பரனார் கூறுகின்றார். இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது. “காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்” என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது. தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று அலைந்து திரிகின்றனரே என்பதை,

Sunday, December 2, 2012

மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள் ( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் ) ( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் ) 365 தேவர்களின் நாள் = 1 தேவர்களின் வருடம் 4800 தேவர்களின் வருடம் = கிருத யுகம் / சத்ய யுகம் 3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம் 2400 தேவர்களின் வருடம் = துவப்பார யுகம் 1200 தேவர்களின் வருடம் = கலி யுகம் 12000 தேவர்களின் வருடம் = 1 சதூர் யுகம் 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது 14 மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள் ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம் பிரம்மா வின் ஒரு பகல் + பிரம்மா வின் ஒரு இரவு = பிரம்மா வின் ஒரு நாள் பிரம்மா வின் 365 நாட்கள் = பிரம்மா வின் ஒரு வருடம் பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள் பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின் அழிவு ) பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான் விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும். கல்பம் / உருவாக்கம் = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் ப்ரலயம் / அழிவு = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை நடப்பது ஒரு கல்பம் ஆகும். சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள் திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள் துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள் கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள் ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும். ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.