Saturday, August 17, 2013

கர்ப்பிணி பெண்களுக்கு..

கர்ப்பிணி பெண்களுக்கு..

 
ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட. 


சில ஆண்கள் பெண் கர்ப்பமாகிய பின்னர், அவளை தாய் வீட்டிற்கு(மாமியார்) வீட்டிற்கு அனுப்பிடுவார்கள். இன்றைய இயந்திர வேகமான உலகில் மாமியார் வீட்டிற்கு மனைவியை அனுப்ப முடியாத கணவன்களின் கையில் உள்ள மிகப் பெரிய பொறுப்புத் தான் ‘கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பாராமரிக்க வேண்டிய பொறுப்பு.

கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க நிறைய வழிகள் இருப்பதாக அனுபவம் மிக்க பெரியோர்கள் சொல்கிறார்கள். ஆனால் தன் ஆசை நாயகி விரும்பிக் கேட்கும் உணவு வகைகளைச் சமைத்தும், வயிற்றுப் பிள்ளத் தாச்சியைக் கொண்டு அதிகளவான வேலைகளைச் செய்விக்காதும் இருப்பதற்கு ஆண்கள் சமையலில் பங்கெடுத்தல் அவசியமான ஒரு செயல் தானே. 

ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் போது, பிள்ளை பெற்ற பின்னரும் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய ஓர் உணவினை எப்படிச் சமைப்பது என்று தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி! 

ஈழத்தில் குடற் புண், வயிறு எரிவு, வயிற்று நோவு, மற்றும் உள் காயங்கள் உள்ளோருக்கும், பிள்ளை பெற்றிருக்கும் பெண்களுக்கும் உட் காயங்களை ஆற்றிடவும், 
வயிற்றில் எரிவினை உண்டாக்காது மிளகாய்க்குப் பதிலாக- வயிற்றினைக் குளிரிவிக்கும் நோக்கில் சமைத்துப் பரிமாறும் ஓர் கூட்டுக் கலவை தான் இந்த அரைச்சு காய்ச்சும் கறி. 


தேவையான பொருட்கள்:

*மூன்று ஸ்பூன் மல்லி (3 Small Spoon)
*சின்னச் சீரகம்/ சிறிய சோம்பு- அரை ஸ்பூன்(அதிகமாக போட்டால் கசப்புச் சுவை உருவாகும்)
*பெரிய சீரகம்/ பெரிய சோம்பு- அரை கரண்டி அளவு
* நான்கு, அல்லது ஐந்து மிளகு
*ஒரு செத்தல் மிளகாய்- One Dry Red Chill 
*சிறிய துண்டு பூண்டு/ உள்ளி
*சிறிய துண்டு இஞ்சி
*மஞ்சள் கட்டை தேவையான அளவு- சிறிதளவு போதும்.

இனிச் செய் முறை: 

*மேலே தரப்பட்ட பொருட்களினை மிக்ஸியில் அல்லது அம்மியில் கொட்டி, அரைக்கத் தொடங்கவும். 

*உள்ளியினையும், இஞ்சியினையும் இறுதியாகச் சேர்த்து அரைக்கவும்.

*உள்ளி, இஞ்சியினைச் சேர்த்து அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். 

*இப்போது களித் தன்மையுடைய கூட்டு மிக்ஸியில்/அம்மியில் தயாராகியவுடன், அதனை எடுத்துப் ஒரு குவளையில் போட்டு வைக்கவும்.

*பழப் புளியினை பிறிதோர் குவளையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வயிற்றில் புண் உள்ளோர், உட் காயங்கள் உள்ளோர் பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.

*இனி ஏற்கனவே அரைத்த களித் தன்மையுடை கூட்டுக் கலவையினை, பழப் புளிக் கலவையோடு மிக்ஸ் பண்ணவும். (ஓரளவு தண்ணிப் பருவமாக)

*சிறிய வெங்காயம், கறி சமைப்பதற்காக சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டிய மீன், உப்பு முதலியவற்றோடு, இந்தக் கலவையினையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*கொதித்துக் கறிப் பருவம் வந்தவுடன் இறக்கி லேசான சூட்டோடு பரிமாறவும்.

முக்கிய விடயம்: அரைக்கப்பட்ட கூட்டுக் கலவையோடு, நீங்கள் மீனுக்குப் பதிலாக முருங்கைக் காயினை அவித்துச் சேர்க்கலாம்.

அல்லது இந்தக் கலவையானது கொதித்து வருகையில் முட்டையினை உடைத்துச் சேர்க்கலாம். 

அல்லது- அவித்த உருளைக் கிழங்கினையும் சேர்த்துச் சமைக்கலாம். 

இப்போது அரைத்துக் காய்ச்சும் கூட்டுக் கலவைக் கறி தயார். உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ நீங்கள் சமைத்துப் பரிமாறி மகிழலாம்.

*உங்கள் கவனத்திற்கு: வயிற்றில் புண் உள்ளோர், பிள்ளை பெற்ற தாய்மார், பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.

Friday, August 16, 2013

96 தத்துவங்கள்

96 தத்துவங்கள்

1 .பூதம் 5
2 .பொறி 5
3 .புலன் 5
4 .கன்மேந்திரியம் 5
5 .ஞானேந்திரியம் 5
6 .கரணம் 4
7 .அறிவு 1
8 .நாடி 10
9 .வாயு 10
10 .விசயம் 5
11 .கோசம் 5
12 .ஆதாரம் 6
13 .மண்டலம்
14 .மலம் 3
15 .தோசம் 3
16 .ஈடனை 3
17 .குணம் 2
18 .வினை 2
19 .ராகம் 8
20 .அவத்தை 5

மொத்தமாக 96

உறுதியாம் பூதாதி யோரைந் தாகும் - 5 elements
உயர்கின்ற பொறி ஐந்து புலன் ஐந்தாகும் - 5 - senses
கருதியாய் கன்ம விந்திரியம் ஐந்தும் - 5 - mind/...
கடிதான ஞானவிந்திரியம் ஐந்தும் - 5 ??
திருதியாம் தீதாய கரணம் நான்கும் - 4
திறமான வரிஒன்றும் நாடி பத்தும் - 10
மருதியாம் வாயுவது பத்தும் ஆகும் - 10
மகத்தான விஷயமஞ்சு கோசமஞ்சே" - 5+5

"அஞ்சவே ஆதார மாறு மாகும் 6
அறிய மண்டல மூன்று மலமூன்றாகும் 3+3
தொஞ்சவே தொடமூன்றி டனை தான் மூன்று 3
தோதமாங் குணமூன்று வினை இரண்டாம். 3+ 2
தஞ்சவே ராகமெட்டு வவத்தை ஐந்து 8+5
தயங்கியதோர் கருவிகடாம் தொநூற்றாறு
ஒஞ்சவே ஒவ்வொன்றாய் விரித்துச் சொல்வேன்
உறுதியாம் பூதாதி உரைக்கக் கேளே

WORLD

1. சாலோகம் – இறைவன் இடத்தில் இருக்கும் நிலை. பூவுலகம் விட்டுப்போனபின் தேவர் உலகத்தில் வாழ்வதை சாலோகம் என்பர்.
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.கடவுளின் அருகே இருப்பதை சாமீபம் என்பார்கள்.
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வதை சாரூபம் என்றும்;
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.கடவுளோடு இரண்டறக்கலந்து வாழ்வதை சாயுஜ்ஜியம் என்றும் சொல்வர்.




அர்த்தமுள்ள இந்து மதம் -Meaningful Hinduism

கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெற

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
...
மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல் போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் நீங்கும் என்பர்.

Saturday, April 13, 2013

காகபுசுண்டர் குறள்


IV. காகபுசுண்டர் குறள்

குறள் வெண்பா

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு                                               

அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.      
 

வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.

 
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.

 
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு


 சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.


 சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.


கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.


விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.


நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.


உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.


கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.


ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.


முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.


யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.


வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.


காகபுசுண்டர் காவியம் 33


காகபுசுண்டர் காவியம் 33 காப்பு கணபதியே அடியாகி அகில மாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக் குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக் கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப் பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே. நூல் எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்; எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும் பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ? சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு சக்கரமும் மக்கரமும் நன்றாய்த் தோணும்; தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ? சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே. 1 புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப் பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும் சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள் சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள் பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற் பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னான் அகட்டினா லைவர்களை யீன்றா ளம்மன் அந்தருமை சொல்லவினி அடியாள் கேளே. 2 கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற் கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி, வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ கோளப்பா செயகால லயந்தா னெங்கே? குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே? ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே? அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே. 3 இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில் எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன அன்னைதனை முகம்பார்த்து மாலை நோக்கி அரிகரி! ஈசர்மொழிக் குரைநீர் சொல்வீர்; பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே? 4 எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக் கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே! காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே! சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே! மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே! மாமுனிகள் ரிஷிசித்தர் அறிவார் காணே. 5 அறிவார்கள் ரிஷிசித்தர் முனிவோ ரையா! அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால் பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா! போயழைக்கக் கோளாறி வசிட்ட ராகும் நெறியாக இவ்வகைநா னறிவே னையா! நிலைத்தமொழி புசுண்டரலால் மற்றோர் சொல்லார்; புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர் பொருள் ஞானக் கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார். 6 மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே! வரலாறு நீயெவ்வா றறிவாய் சொல்வாய்; சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும் சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான் அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பா ரையா! அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம் இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன் இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர். 7 கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ கிருபையுட னிவ்வளவுமறிவா யோடா? ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்! காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார் கருவேது நீயறிந்த வாறு மேது! பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே. 8 பரமான பரமகயி லாச வாசா! பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித் தரமான புசுண்டமுனி யந்த வேள சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே தூரமாக எவ்வாறோ திரும்பப் போவார் சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான் வரமான வரமளித்த சூரன் வாழ்வே வசிட்டர்போ யழைத்துவரத் தகுமென் றாரே. 9 தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை அகமகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன செகமான செகமுழுது மாண்ட சோதி திருவடிக்கே நமஸ்கரித்துத் திரும்பி னார்பின் உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே. 10 காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர் எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத் தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார். சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்! பாகமுடன் எட்டான விவரந் தன்னைப் பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே. 11 பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்ட ரே! நீர் பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்! சத்தான சத்துகளு மடங்கும் காலம் சக்கரமுந் திரும்பிவிட்டாற் சமயம் வேறாம் சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது சேரவே ரிஷிமுனிவர் சித்த ரோடு முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார் முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே. 12 முளைத்திட்டீ ரித்தோடெட் டுவிசை வந்தீர் முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்! களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்; கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன? கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார் கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந் தீரே. 13 வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்; வளமைதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும் அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார் அவர்களெல்லாம் ரிஷியோகி சித்த ரானார் சந்தேக முமக்குரைக்கப் போகா தையா! சாமிக்கே சொல்லுமையா இதோவந் தேனே. 14 வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி இந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர் என்றுசிவன் சபைநாடி முனிவர் வந்தார். மைந்தனையே யீன்றருளுங் கடவுள் நாதா! மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்; சிந்தனைசெய் ஈச்சரனே வந்தேனையா சிவசிவா இன்னதென்று செப்பி டீரே? 15 செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்; கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம் குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே? அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே? அயன்மாலும் சிவன்மூவ ரடக்க மெங்கே? ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே? ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே! 16 உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு; உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்; பரமசிவன் தானமென்னும் பேரும் பெற்றீர்; இரையென்றால் வாய்திறந்து பட்சி போல எல்லோரு மப்படியே இறந்திட் டார்கள்; நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால் நிசங்கொள்ள தந்தரங்கள் நிசங்கொள் ளாதே? 17 கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி; கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்; உள்ளாக ரிடியொருவ ரில்லா விட்டால் யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்; விள்ளாமற் றீராது முனிவனே! கேள்; மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி; தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச் சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே? 18 சாற்றுகிறே னுள்ளபடி யுகங்கள் தோறும் தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு; மாற்றுகிறேன் கணத்தின்முன் னுரைத்துப் போனேன்; வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்? சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத் திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்; ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே. 19 கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை கொடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்; பரமான மவுனமது பரத்திற் சாடும்; ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்தசதா சிவமோடி மணியில் மீளும் கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார் ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே. 20 கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு தவழ்ந்துபோங் காலமப்போ நிறுத்து வேன்யான் சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ் சிவந்தவண்ணம் நீலவுருச் சுடாவிட் டேகும்; சிவ சிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்; நவந்துஅத னருகேதான் சென்று நிற்பேன்; நகரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே. 21 காண்பேனே நாகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் கோண்பேனே யகாரமது சுடரிற் புக்கும் குருவான சுடரோடி மணியிற் புக்கும் நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும் நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே. 22 கேளப்பா சிவமோடி அண்டம் பாயும் கிருபையா யண்டமது திரும்பிப் பாயும் கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான் குருவான தசதீட்சை யொன்று மாச்சு மீளப்பா தம்பமது விளங்கு மஞ் செய்கை மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்; ஆளப்பா நரைத்தமா டேறு வோனே! அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே. 23 அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி! அரகரா உன்போல முனியார் காணேன்; தெரிந்திலே னென்றுரைத்தார் மனங்கே ளாது சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா; பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும் பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா! பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே. 24 பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே! பருந்தீபதம்பத்தைப் பலுக்கக் கேளும்; குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்; தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச் சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய் அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய் அரகரா கண்ணாடி லீலை தானே. 25 லீலைபொற் காணுமுகம் போலே காணும் நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்; ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத் துள்ளே அரகரா சக்கரங்க ளாறுங் காணும் வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணுஞ் சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமுங் காணே. 26 பரத்திலே மணிபிறக்கும் மணியி னுள்ளே பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்; நிரத்திலே சடமதனில் யகாரங் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும் வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும் வரும்போலே சிகாரத்தில் மகாரம் காணும் நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும் நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே. 27 பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால் பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம் சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை; கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக் காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும் இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி. 28 இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம் இருவருக்கும் நடுவான திவளே மூலம் தொடக்காக நின்றவளு மிவளே மூலம் சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம் அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம் ஐவருக்குங் குருமூல மாதி மூலம் கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே. 29 கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தரப்போ மனஞ்சற்றே கலங்கி னார்பின் மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே! உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம் ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள் கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே. 30 வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே மாதுகலி யாணியென வசனித் தார்கள் வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும் மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும் வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும் வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர் வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே. 31 அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள் அரகரா சின்மயத்தி னீறு பூசிப் பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப் பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த் தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச் செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித் திருளீவாள் தாயான சிறிய வாலை சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே. 32 பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்; காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங் கம்பமணி வாலைகொலுக் கூட்டமப்பா நாரணத்தில் நின்றிலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகங் கேளு ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி ஆதிசத்தி வேதமுத்தி யருள் செய்வாளே. 33

காகபுசுண்டர் உபநிடதம் - 31 -2


விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள் விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு; தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந் துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும் எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத் தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி; தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற் சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம். 11 சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்; சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்; தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள் சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்; காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற் காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே. 12 கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக் காணாது சீவான்மா பரமான் மாவும்; தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச் சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம் யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை; விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால் விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே. 13 வீணல்லோ சாதனப்ர யோச னங்கள் மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது? வீணல்லோ வேதபா டத்தி னிச்சை வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்? வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும் வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்? மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே. 14 வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும் வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும் காணுகின்ற பூவிலுறை வாசம் போலும் கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும் தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும் தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்; ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே. 15 அரிதில்லை பிரமவியா கிருத சீவன் ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச் சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக் குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால் குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும் திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது; சீவவை ராக்யமெனுந் திறமி தானே. 16 திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம் திருசியசூன் யாதிகளே தியான மாகும்; சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதியெனத் தானே போகும்; வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்; அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான் அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே. 17 என்னவே அஞ்ஞானி உலகா சாரத் திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள் முன்னமே செய்ததன்பின் மரண மானால் மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல் வின்னமதா யாங்கார பஞ்ச பூத விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச் சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே. 18 தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ் சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்; ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார் வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே. 19 ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம் அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்; மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்; கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம் குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்; பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே. 20 பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன் பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன் வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன் தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்; சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்; ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்; ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே. 21 யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான் உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே; ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான் அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்; சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்; சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி; மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே. 22 மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா; சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம் சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்; தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில் சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்; மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை மூலவிந்து களாதீத மொழிய லாமே. 23 மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின் மோனபிரா ணாதியதே நாத மாச்சு; தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற் சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்; ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம் உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான் வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே. 24 விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 25 பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. 26 கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம் கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்; விண்ணான பெருவெளிக்கு ளீன மானால் விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்; ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்; அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்? அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே; 27 அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக் குறைவில்லை ஓங்கார மூல வட்டக் குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான் நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு நீக்காம லேகமாய் நிர்ண யித்துப் பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப் பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே. 28 புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும் பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான் துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச் சுபாவசா தனையினால் மவுன மாச்சு; விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு; விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு; மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு; வத்துவதே காரணமா மகிமை யாச்சே. 29 மகிமையென்று யோகசா தனையி னாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே; அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே; அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம் சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில் சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு; பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு; பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே. 30 பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம் தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால் சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில் முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான் மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான் நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே. 31